செய்திகள்
அமைச்சர் துரைமுருகன்

மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியது என்ன?- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published On 2021-07-16 09:57 GMT   |   Update On 2021-07-16 09:57 GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என்று தமிழக அனைத்து கட்சி குழுவிடம் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் ஜல்சக்தி துறை அமைச்சரை தமிழக அனைத்து கட்சிக்குழு சந்தித்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

* மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எந்த வகையிலும் மத்திய அரசு துணை போகக்கூடாது என்று வலியுறுத்தினோம்.



* மத்திய அரசின் நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை எனவும், மேகதாது அணைக்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கை முழுமையாக இல்லை எனவும் மத்திய அமைச்சர் கூறினார்.

* காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


Tags:    

Similar News