செய்திகள்
மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியது என்ன?- அமைச்சர் துரைமுருகன் பேட்டி
காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என்று தமிழக அனைத்து கட்சி குழுவிடம் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் ஜல்சக்தி துறை அமைச்சரை தமிழக அனைத்து கட்சிக்குழு சந்தித்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
* மத்திய அரசின் நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை எனவும், மேகதாது அணைக்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கை முழுமையாக இல்லை எனவும் மத்திய அமைச்சர் கூறினார்.
* காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
டெல்லியில் ஜல்சக்தி துறை அமைச்சரை தமிழக அனைத்து கட்சிக்குழு சந்தித்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
* மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எந்த வகையிலும் மத்திய அரசு துணை போகக்கூடாது என்று வலியுறுத்தினோம்.
* மத்திய அரசின் நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை எனவும், மேகதாது அணைக்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கை முழுமையாக இல்லை எனவும் மத்திய அமைச்சர் கூறினார்.
* காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இதையும் படியுங்கள்...எடியூரப்பா திடீர் டெல்லி பயணம் - பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார்