செய்திகள்
பிரதமர் மோடி

நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர் -பிரதமர் மோடி புகழாரம்

Published On 2021-07-15 13:13 GMT   |   Update On 2021-07-15 13:13 GMT
கல்வி மற்றும் சுகாதாரம், பெண்களுக்கான அதிகாரம் ஆகியவை தொடர்பான காமராஜரின் வலியுறுத்தல்கள் தொடர்ந்து இந்திய மக்களுக்கு ஊக்கமளித்து வருகிறது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
புதுடெல்லி: 

கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளான இன்று, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் காமராஜருக்கு மரியாதை செய்தனர். காமராஜரின் பிறந்தநாளையொட்டி,  அவரை நினைவுகூர்ந்து பல்வேறு தலைவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், "மாபெரும் தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திக்கொள்கிறேன். அவர் வாழ்க்கையை தேசிய வளர்ச்சி மற்றும் சமூகத்திற்காக அர்ப்பணித்தார். கல்வி மற்றும் சுகாதாரம், பெண்களுக்கான அதிகாரம் ஆகியவை தொடர்பான அவரது வலியுறுத்தல்கள் தொடர்ந்து இந்திய மக்களுக்கு ஊக்கமளித்து வருகிறது" என கூறி உள்ளார்.
Tags:    

Similar News