செய்திகள்
பிரதமர் மோடி

வடகிழக்கு மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

Published On 2021-07-12 20:13 GMT   |   Update On 2021-07-12 20:13 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கணிசமாகக் குறைந்து வருகிறது.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ள நிலையில், தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை  40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறைந்து வரும் சூழலில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகலாயா, அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 8 மாநிலங்களின் முதல் மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. 
Tags:    

Similar News