செய்திகள்
குஜராத் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜரானார்

அவதூறு வழக்கு: குஜராத் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜரானார்

Published On 2021-06-24 11:31 GMT   |   Update On 2021-06-24 11:31 GMT
நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திரமோடி என எப்படி எல்லோரும் பொதுவான குடும்பப் பெயரில் வருகின்றனர்? அனைத்து திருடர்களும் மோடியை பொதுவான குடும்பப் பெயராக கொண்டு இருப்பது எப்படி? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

சூரத்:

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் கோலாரில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசும் போது, மோடியை விமர்சனம் செய்தார்.

நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திரமோடி என எப்படி எல்லோரும் பொதுவான குடும்பப் பெயரில் வருகின்றனர்? அனைத்து திருடர்களும் மோடியை பொதுவான குடும்பப் பெயராக கொண்டு இருப்பது எப்படி? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.


இதையடுத்து ராகுல் காந்தியின் மீது குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பர்னேஷ் மோடி எம்.எல்.ஏ. சூரத்தில் உள்ள மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ராகுல்காந்தி, ஒட்டுமொத்த மோடி சமூகத்தினரையே இழிவுபடுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கில் தனது இறுதி வாக்குமூலத்தை சமர்ப்பிப்பதற்காக ராகுல்காந்தி இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தவே உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி இன்று ராகுல்காந்தி சூரத் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆஜரானார். அவர் சுமார் காலை 10.30 மணிக்கு கோர்ட்டுக்கு வந்தார். ராகுல்காந்தி, நீதிபதி முன்பு ஆஜரான பின்பு விசாரணை தொடங்கியது.

Tags:    

Similar News