செய்திகள்
கர்நாடகாவில் இருந்து மும்பைக்கு மீண்டும் பயணிகள் பேருந்து போக்குவரத்து
பெங்களூரு உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து மும்பைக்கு மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க கர்நாடக மாநிலம் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை காரணமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிர மாநில மும்பைக்கு செல்லும் பயணிகள் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தற்போது இரண்டு மாநிலங்களிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் கர்நாடக மாநில போக்குவரத்துத்துறை நாளைமுதல் கர்நாடகாவின் பல்வேறு நகரங்களில் இருந்து மும்பைக்கு மீண்டும் பயணிகள் போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.
பெங்களூரு, ஷிவமோகா, மங்களூரு உள்பட பல இடங்களில் இருந்து மும்பை, புனே, மிரஜ், சோலாப்பூர், பந்தராபூர், துல்ஜாபூர் ஆகிய நகரங்களுக்கு 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.