செய்திகள்
பரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published On 2021-06-24 10:24 GMT   |   Update On 2021-06-24 10:24 GMT
பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் கட்சிகள் தலைவருடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி மதியம் 3.30 மணிக்கு பிரதமர் மோடி இல்லத்தில் இந்த கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில் ஜம்மு- காஷ்மீர் கவர்னர், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் மற்றும் அம்மாநில கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News