செய்திகள்
அருணாசல பிரதேசத்தில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இடாநகர்:
அருணாசல பிரதேசத்தில் உள்ள தவாங் என்ற பகுதியில் இன்று இரவு 10.14 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.