செய்திகள்
பாஜக

காங்கிரசின் உட்கட்சி பூசல் விரைவில் வீதிக்கு வரும்: பாஜக

Published On 2021-06-21 03:48 GMT   |   Update On 2021-06-21 03:48 GMT
சித்தராமையாவின் ஆதரவாளரான ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ.வை கட்டுப்படுத்த காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரால் முடியவில்லை. காங்கிரசின் உட்கட்சி பூசல் விரைவில் வெடிக்கும். அது வீதிக்கு வரும்.
பெங்களூரு

கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற இப்போது இருந்த தந்திரம் வகுத்து வருகிறார். இதனால் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் நடக்கிறது.

சித்தராமையா தனது ஆதரவாளர்கள் மூலம், அடுத்த முதல்-மந்திரி தானே என்று கூற சொல்கிறார். அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறிவிட்டு, இப்போது தொகுதி மாறி நிற்க சித்தராமையா முடிவு செய்துள்ளார்.

சித்தராமையாவின் ஆதரவாளரான ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ.வை கட்டுப்படுத்த காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரால் முடியவில்லை. காங்கிரசின் உட்கட்சி பூசல் விரைவில் வெடிக்கும். அது வீதிக்கு வரும்.

இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News