செய்திகள்
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் புதிதாக 5,783 பேருக்கு கொரோனா: 168 பேர் பலி

Published On 2021-06-19 04:29 GMT   |   Update On 2021-06-19 04:29 GMT
கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 25 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரத்து 50 ஆக குறைந்துள்ளது.
பெங்களூரு :

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 42 ஆயிரத்து 498 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5,783 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 96 ஆயிரத்து 121 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு நேற்று 168 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 15 ஆயிரத்து 290 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து,
கொரோனா
வில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 25 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரத்து 50 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 4.05 சதவீதமாக ஆக உள்ளது.

பெங்களூரு நகரில் 1,100 பேர், பாகல்கோட்டையில் 7 பேர், பல்லாரியில் 155 பேர், பெலகாவியில் 139 பேர், பெங்களூரு புறநகரில் 207 பேர், பீதரில் 11 பேர், சாம்ராஜ்நகரில் 83 பேர், சிக்பள்ளாப்பூரில் 104 பேர், சிக்கமகளூருவில் 278 பேர், சித்ரதுர்காவில் 114 பேர், தட்சிண கன்னடாவில் 1,006 பேர், தாவணகெரேயில் 174 பேர், தார்வாரில் 65 பேர், கதக்கில் 23 பேர், ஹாசனில் 390 பேர், ஹாவேரியில் 28 பேர், கலபுரகியில் 18 பேர், குடகில் 147 பேர், கோலாரில் 89 பேர், கொப்பலில் 60 பேர், மண்டியாவில் 249 பேர், மைசூருவில் 551 பேர், ராய்ச்சூரில் 15 பேர், ராமநகரில் 41 பேர், சிவமொக்காவில் 199 பேர், துமகூருவில் 153 பேர், உடுப்பியில் 188 பேர், உத்தரகன்னடாவில் 132 பேர், விஜயாப்புராவில் 44 பேர், யாதகிரியில் 13 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் 39 பேரும், பல்லாரியில் 14 பேரும், பெலகாவியில் 5 பேரும், பெங்களூரு புறநகரில் 3 பேரும், தட்சிண கன்னடாவில் 14 பேரும், தாவணகெரேயில் 10 பேரும், தார்வாரில் 9 பேரும், ஹாசனில் 9 பேரும், மைசூருவில் 15 பேரும், சிவமொக்காவில் 6 பேரும், சிக்பள்ளாப்பூரில் 5 பேரும், சிக்கமகளூருவில் 4 பேரும் என மொத்தம் 168 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News