செய்திகள்
உ.பி.யில் சோகம் - சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் பலி
உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஆக்ராவில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் சிக்கிக் கொண்டனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் காகரோல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் படுகாயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே 3 குழந்தைகளும் உயிரிழந்தனர். 3 முதல் 8 வயதுக்குள் இருக்கும் அவர்களில் ஒரு சிறுவனும், 2 சிறுமியும் அடங்குவார்கள்.
சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் மொத்தம் 9 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் பிரபு சிங் தெரிவித்துள்ளார்.
சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.