செய்திகள்
கோப்புப்படம்

சர்வதேச தரத்துடன் அயோத்தியில் ரூ.400 கோடியில் நவீன பஸ் நிலையம் - உ.பி. மந்திரிசபை ஒப்புதல்

Published On 2021-06-14 23:29 GMT   |   Update On 2021-06-14 23:29 GMT
அயோத்தி-சுல்தான்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு 4 வழிப்பாதை மேம்பாலம் கட்டவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
லக்னோ:

அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அங்கு சர்வதேச தரத்தில் ரூ.400 கோடி செலவில் அதிநவீன பஸ் நிலையம் கட்டப்படுகிறது. உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற மாநில மந்திரிசபை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

9 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் பஸ் நிலையம் கட்டப்படுகிறது. அரசு-தனியார் கூட்டு அடிப்படையிலோ அல்லது மாநில அரசாலோ இந்த பஸ் நிலையம் கட்டப்படும்.

மேலும், அயோத்தி-சுல்தான்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு 4 வழிப்பாதை மேம்பாலம் கட்டவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது, ரூ.20 கோடியே 17 லட்சம் செலவில் கட்டப்படுகிறது.
Tags:    

Similar News