செய்திகள்
சாராயம் வாங்குவதற்காக 2 வயது மகளை விற்ற தந்தை
சாராயம் குடிப்பதற்கு பணம் இல்லாததால் தனது 2 வயது மகளை குழந்தை இல்லாத ஒரு தம்பதியிடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்று உள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் ஜெய்பூர் மாவட்டம், கேந்திர பிரதாப் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ரமேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. சாராயம் குடிப்பதற்கு பணம் இல்லாததால் அவர் தனது 2 வயது மகளை குழந்தை இல்லாத ஒரு தம்பதியிடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்று உள்ளார்.
குழந்தையை விற்ற பணத்தில் அவர் சாராயம் வாங்கி குடித்துள்ளார். இதற்கிடையே குழந்தையை காணாமல் அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். அப்போதுதான் குழந்தை இல்லாத தம்பதியிடம் அந்த குழந்தை இருப்பது தெரிய வந்தது.
2 வயது மகளை தனது தந்தையே சாராயம் குடிப்பதற்காக விற்ற தகவல் அறிந்ததும் குடும்பத்தினரும், உறவினரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.