செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் -கெஜ்ரிவால் அறிவிப்பு

Published On 2021-06-14 08:29 GMT   |   Update On 2021-06-14 08:38 GMT
குஜராத் மாநிலத்தின் நவ்ராங்ப்பூர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தை கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார்.
காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல், ஆளும் பாஜகவுக்கு மிகுந்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டும்.

இந்நிலையில், 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 


குஜராத் சென்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநிலத்தின் நவ்ராங்ப்பூர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். 



அதன்பின்னர் பேசிய கெஜ்ரிவால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப்போட்டியிடும் என்றார். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒரேமாதிரிதான் என்று விமர்சித்த கெஜ்ரிவால், குஜராத் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்றார்.

குஜராத் மாநிலத்தின் பிரபல செய்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக செயல்பட்டு வந்த இஷுதன் காத்வி என்பவர் ஆம் ஆம்தி கட்சியில் இணைந்தார். அவரை 'குஜராத்தின் கெஜ்ரிவால்’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டினார்.
Tags:    

Similar News