செய்திகள்
உமர் அப்துல்லா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - உமர் அப்துல்லா கண்டனம்

Published On 2021-06-12 21:43 GMT   |   Update On 2021-06-12 21:43 GMT
ஜம்மு - காஷ்மீரின் சோம்பூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் சோம்பூரில் உள்ள அரம்போரா பகுதியில் பயங்கரவாதிகளால் நேற்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 2 காவலர்கள் மற்றும் 2 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக, ஐ.ஜி. விஜய்குமார் கூறுகையில், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 காவலர்கள், 2 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
மேலும் தப்பியோடிய தீவிரவாதிகளை ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து தேடிவருகிறது என தெரிவித்தார்.

இந்நிலையில், சோம்பூர் தாக்குதலுக்கு முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக குறிப்பிட்ட அவர், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News