செய்திகள்
ஊரடங்கு

கோவாவில் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-06-12 18:29 GMT   |   Update On 2021-06-12 18:34 GMT
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
பனாஜி:

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அம்மாநில முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவாவில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. தற்போது உள்ள கட்டுப்பாடுகள் 21-ம் தேதி காலை 7 மணி வரை தொடரும் என்றார்.

ஊரடங்கு உத்தரவின்போது அத்தியாவசிய பொருள்கள், மளிகைக் கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.
Tags:    

Similar News