செய்திகள்
கேரளாவில் 2 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை- 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் ‘அலர்ட்’
மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும், நாளையும் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு மைய அதிகாரிகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலத்த மழை மற்றும் கடல் பகுதியில் காற்று வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் வருகிற 15-ந்தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும், நாளையும் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு மைய அதிகாரிகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலத்த மழை மற்றும் கடல் பகுதியில் காற்று வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் வருகிற 15-ந்தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.