செய்திகள்
சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

Published On 2021-06-10 11:55 GMT   |   Update On 2021-06-10 11:55 GMT
சமையல் எரிவாயு பயன்படுத்துவோர் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை பெறுவதற்கான திட்டம் விரைவில் வருகிறது.
புதுடெல்லி:

சமையல் எரிவாயு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்து மட்டுமே கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து பெற முடியும். இந்த முறையை மாற்றி, வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் இருந்து கேஸ் முன்பதிவு செய்து பெறுவதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது. 

இதுதொடர்பான அறிவிப்பை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில், சமையல் எரிவாயுவை தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் இருந்து பெறும் வசதியானது, முதற்கட்டமாக சண்டிகர், கோவை, குர்கான், புனே மற்றும் ராஞ்சியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. வரவேற்பைப் பொருத்து மற்ற பகுதிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News