செய்திகள்
தெலுங்கானாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு
தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,897 பேருக்கு கொரோனா-வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,982 பேர் குணம் அடைந்த நிலையில், 15 பேர் நோய்த் தொற்றுக்கு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, தெலுங்கானாவில் கொரோனா-வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், தொற்றுப் பரவலை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 10-ம் தேதி முதல் 10 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ள தெலுங்கானா அரசு, இரவு நேர ஊரடங்கு (மாலை 6 மணி முதல் காலை 6 மணி) தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.