செய்திகள்
நிலநடுக்கம்

டெல்லியில் 2.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

Published On 2021-05-31 17:59 GMT   |   Update On 2021-05-31 17:59 GMT
டெல்லியில் இன்று இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் இன்று இரவு 9.54 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.4 ஆக பதிவானதுஎன தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

முன்னதாக, இன்று காலை 9.50 மணிக்கு அசாம் மாநிலம் திஸ்பூரில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News