செய்திகள்
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு ராகுல் காந்தி அஞ்சலி - காங்கிரஸ் கட்சியும் மரியாதை
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 57-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் நேருவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி:
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 57-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் நேருவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் தனது டுவிட்டர் தளத்திலும் முன்னாள் பிரதமருக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.
இதைப்போல காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் தளத்தில், ‘இந்தியாவுக்கும், உலகுக்கும் மறக்கமுடியாத பங்களிப்பை ஆற்றிய பண்டித ஜவகர்லால் நேருவை நாம் பெருமைப்படுத்துகிறோம். உயர்ந்த அறிவாற்றல் கொண்டவர், நவீன இந்தியாவின் சிற்பி மற்றும் உண்மையான தேசபக்தராகவும் திகழ்ந்தார்’ என்று குறிப்பிட்டு இருந்தது.
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், முதல்-மந்திரிகள் அமரிந்தர் சிங், அசோக் கெலாட், பூபேஷ் பாகேல், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் நேருவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 57-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் நேருவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் தனது டுவிட்டர் தளத்திலும் முன்னாள் பிரதமருக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.
இதைப்போல காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் தளத்தில், ‘இந்தியாவுக்கும், உலகுக்கும் மறக்கமுடியாத பங்களிப்பை ஆற்றிய பண்டித ஜவகர்லால் நேருவை நாம் பெருமைப்படுத்துகிறோம். உயர்ந்த அறிவாற்றல் கொண்டவர், நவீன இந்தியாவின் சிற்பி மற்றும் உண்மையான தேசபக்தராகவும் திகழ்ந்தார்’ என்று குறிப்பிட்டு இருந்தது.
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், முதல்-மந்திரிகள் அமரிந்தர் சிங், அசோக் கெலாட், பூபேஷ் பாகேல், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் நேருவுக்கு அஞ்சலி செலுத்தினர்.