செய்திகள்
கோப்புப்படம்

மணிப்பூரில் இன்று நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

Published On 2021-05-23 02:41 GMT   |   Update On 2021-05-23 02:41 GMT
மணிப்பூரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது.
இம்பால்:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நிலநடுக்கமானது உணரப்பட்டது. 

நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்ததாக அங்குள்ள மக்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை காண முடிந்தது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை. கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News