செய்திகள்
நெருங்கும் டவ்-தே புயல்... உள்துறை மந்திரி அமித் ஷா ஆலோசனை
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று குஜராத் நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகம் மற்றும் கோவா மாநிலங்களில் கனமழை பெய்கிறது. இதேபோல் மகாராஷ்டிரா, குஜராத்திலும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.
காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், மகாராஷ்டிரா, குஜராத் மாநில முதல்வர்கள் மற்றும் டாமன்-டையு, தாதர் நகர் ஹவேலி அதிகாரிகள் பங்கேற்றனர்.