செய்திகள்
கொரோனாவால் இருந்து மக்களை காக்க வேண்டி திருப்பதியில் சிறப்பு பாராயணம் நடந்த காட்சி.

கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டி திருப்பதியில் சிறப்பு பாராயணம்

Published On 2021-05-14 05:37 GMT   |   Update On 2021-05-14 05:37 GMT
உலகத்திலிருந்து கொரோனா ஒழிய வேண்டியும், கொரோனா பரவாமல் மக்களை பாதுகாக்க வேண்டியும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுந்தரகாண்ட பாராயணம் நடந்தது.
திருப்பதி :

உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். உலகத்திலிருந்து கொரோனா ஒழிய வேண்டியும், கொரோனா பரவாமல் மக்களை பாதுகாக்க வேண்டியும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுந்தரகாண்ட பாராயணம் நடந்தது.

முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையில் வேத பாடசாலையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்தனர். இதையடுத்து அங்குள்ள வசந்த மண்டபத்தில் 227 முறை சுந்தரகாண்ட பாராயணம் மற்றும் அனுமன் ஜெய மந்திரம் ஓதினர்.
Tags:    

Similar News