செய்திகள்
கோப்புப்படம்

கோவா ஆஸ்பத்திரியில் மீண்டும் 15 கொரோனா நோயாளிகள் பலி

Published On 2021-05-13 22:01 GMT   |   Update On 2021-05-13 22:01 GMT
கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன்பு 26 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
பனாஜி:

கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன்பு 26 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அந்த சோகச்சுவடு மறையும் முன்பாகவே சில நாள் இடைவெளியில் நேற்று 15-க்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மீண்டும் இறந்துள்ளனர். இந்த தகவலை மும்பை ஐகோர்ட்டில் மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட அழுத்த வேறுபாடு காரணமாக நோயாளிகளுக்கு போதிய ஆக்சிஜன் வினியோகம் கிடைக்காமல் அவர்கள் மூச்சுத்திணறி இறந்துள்ளனர். இதுகுறித்து ஐகோர்ட்டு பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

அப்போது கோவாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கிறதா? என்று அரசு தரப்பிடம் கேட்கப்பட்டது. முதலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 26 பேர் இறந்தபின்பு, மத்திய அரசு கோவாவுக்கு கூடுதல் ஆக்சிஜன் வினியோகம் செய்துவருகிறது. இருந்தபோதிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.
Tags:    

Similar News