செய்திகள்
உயிரிழந்த யானைகள்

அசாமில் பரிதாபம்: வனப்பகுதியில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு

Published On 2021-05-13 13:34 GMT   |   Update On 2021-05-13 13:34 GMT
அசாம் மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே இடத்தில் 18 யானைகள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அசாம் மாநிலத்தின் நகோன் மாவட்டத்திற்கு உட்பட்ட கதியாடோலி காட்டுப்பகுதியில் இன்று காலை 18 யானைகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்தது வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்குள்ள சூழ்நிலையை பார்க்கும்போது மின்னல் தாக்கி 18 யானைளும் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், யானைகள் இறந்ததற்கான உண்மையான காரணம் குறித்து வனத்துறையினர் இதுவரை தெளிவுப்படுத்தவில்லை.
Tags:    

Similar News