செய்திகள்
ஆக்சிஜன் சிலிண்டர்

தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 டன்னாக அதிகரிப்பு

Published On 2021-05-08 14:37 GMT   |   Update On 2021-05-08 14:37 GMT
தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தேவையும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று 220 டன்னாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ஆக்ஸிஜன் அளவை 419 டன்னாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
Tags:    

Similar News