செய்திகள்
கொரோனா பரிசோதனை

ஒரு வாரமாக 180 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

Published On 2021-05-08 13:33 GMT   |   Update On 2021-05-08 13:33 GMT
கடந்த 21 நாட்களாக 54 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4,01,078 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தினசரி பாதிப்பு, 3வது நாளாக தொடர்ந்து 4 லட்சத்தை தாண்டி பதிவாகி உள்ளது. எனினும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:-

நாடு முழுவதும் கடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. கடந்த 14 நாட்களாக 18 மாவட்டங்களிலும், கடந்த 21 நாட்களாக 54 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News