செய்திகள்
விஜய்ராகவன்

கொரோனா 3-வது அலையை தடுக்க முடியும் - மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன்

Published On 2021-05-07 13:20 GMT   |   Update On 2021-05-07 13:20 GMT
அனைத்து மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3-வது அலையை தடுக்க முடியும் என மத்திய அரசின் அறிவியக் ஆலோசகர் விஜய்ராகவன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக நாடுகளை விட இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  தொடர்ந்து ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து சீராக எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாக இன்று உச்சமடைந்து உள்ளது. ஒரேநாளில் புதிதாக 4,14,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது நேற்றைய (4,12,262) எண்ணிக்கையை விட சற்று அதிகம் ஆகும்.



இந்நிலையில்,  மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3-வது அலையை தடுக்க முடியும்.  அனைத்து மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3-வது அலையை தடுக்க முடியும் என்றார்.

Tags:    

Similar News