செய்திகள்
தேர்தல் ஆணையம்

கொரோனா பரவல் எதிரொலி - 3 எம்.பி., 8 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தள்ளிவைப்பு

Published On 2021-05-06 21:58 GMT   |   Update On 2021-05-06 21:58 GMT
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 3 பாராளுமன்ற தொகுதிகள், 8 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் தள்ளிவைத்துள்ளது.
புதுடெல்லி:

தாத்ரா நகர் ஹவேலி, மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா, இமாசல பிரதேச மாநிலம் மண்டி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.

அதுபோல், அரியானா மாநிலத்தில் கல்கா, எல்லனாபாத், மேகாலயா மாநிலத்தில் ராஜபாலா, மவ்ரிங்னெங், ராஜஸ்தானில் வல்லபநகர், கர்நாடகாவில் சிந்த்கி, இமாசல பிரதேசத்தில் பதேபூர், ஆந்திர மாநிலத்தில் பட்வேல் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்நிலையில், இந்தத் தொகுதிகளுக்காக நடைபெற இருந்த இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் தள்ளிவைத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இம்முடிவை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.
Tags:    

Similar News