செய்திகள்
ராஜஸ்தானில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தி வருகின்றன.
ஜெய்ப்பூர்:
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராஜ்ஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 17,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 161 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் வரும் மே 10-ம் தேதி காலை 5 மணி முதல் மே 24-ம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர உதவிகள் தவிர பிற வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் எதுவும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராஜ்ஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 17,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 161 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் வரும் மே 10-ம் தேதி காலை 5 மணி முதல் மே 24-ம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர உதவிகள் தவிர பிற வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் எதுவும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.