செய்திகள்
மந்திரி சுரேஷ்குமார்

அடுத்த மாதம் 15-ந் தேதி 8 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்: மந்திரி சுரேஷ்குமார்

Published On 2021-05-06 03:58 GMT   |   Update On 2021-05-06 03:58 GMT
வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாடங்களை நினைவு கூறும் வகுப்புகள் தொகுப்புகள் தொடங்கப்படும். இந்த வகுப்புகள் 14-ந் தேதி வரை நடைபெறும்.
பெங்களூரு :

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொடக்க பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் 14-ந் தேதி வரை கோடை விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தொடங்கி வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது.

உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், 10-ம் வகுப்பு தேர்வு குறித்து மாணவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். செல்போன் மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களை தேர்வுக்கு தயாராகும்படி ஊக்குவிக்க வேண்டும். வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாடங்களை நினைவு கூறும் வகுப்புகள் தொகுப்புகள் தொடங்கப்படும். இந்த வகுப்புகள் 14-ந் தேதி வரை நடைபெறும். அதைத்தொடர்ந்து 15-ந் தேதி முதல் 8 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இயல்பான வகுப்புகள் தொடங்கும்.

இவ்வாறு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News