செய்திகள்
கோப்புபடம்

கொரோனா பரவல் அதிகரிப்பு - நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆந்திர அரசு முடிவு

Published On 2021-04-23 14:03 GMT   |   Update On 2021-04-23 14:03 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐதராபாத்:

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் இத்தகைய நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம், மக்கள் இயங்குவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவுக்கும், மக்களுக்குமான இடைவெளியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஆந்திர மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது.



இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News