செய்திகள்
கொரோனாவுக்கு பீகார் மாநில சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் பலி
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் உயர் அதிகாரியான சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் உயிரிழந்துள்ளார்.
வட மாநிலங்களில் கொரோனா 2-ம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களில் கடந்த ஆண்டை விட மிகத்தீவிரமாக பரவி வருகிறது.
பீகார் மாநிலத்தின் சுகாதாத்துறையின் கூடுதல் செயலாளராக இருந்தவர் ரவி சங்கர் சவுத்ரி. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.