செய்திகள்
கொரோனா பரவல்- மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா தொற்று பரவலானது அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன.
இந்நிலையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 23) ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலோசனைக்கூட்டதில் கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.