செய்திகள்
சுனிதா

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா

Published On 2021-04-20 22:14 GMT   |   Update On 2021-04-20 22:14 GMT
தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அங்கு 6 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அங்கு 6 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தினசரி தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.



இந்தநிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவுக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதேபோல் அவரது கணவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக டெல்லி அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News