செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா நோயாளிகளுக்கு ஒரு சில மணி நேரத்திற்கே சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் உள்ளது: கெஜ்ரிவால்

Published On 2021-04-20 13:58 GMT   |   Update On 2021-04-20 13:58 GMT
டெல்லி மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு தாமதமின்றி ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா தொற்று பரவலால் பல்வேறு மாநிலங்களும் தவித்து வருகின்றன. தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பெறுவதில் பெரும் சிக்கல் நீடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உடனடியாக மத்திய அரசு டெல்லிக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News