செய்திகள்
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கொரோனா தொற்று
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், பல அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையராக கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்த தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.