செய்திகள்
கேரளா: நடுக்கடலில் படகு மீது கப்பல் மோதி விபத்து- 3 மீனவர்கள் பலி
மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது கப்பல் எதிர்பாராத விதமான படகில் மோதியலில் மூன்று மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் பேபூர் என்ற இடத்தில் இருந்து ஒரு படகில் 14 மீனவர்கள் நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் மங்களூர் பகுதி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக சென்ற கப்பல் திடீரென படகு மீது மோதியுள்ளது.
இதில் மூன்று மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் மீட்டகப்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. மற்ற மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மங்களூரு கடலோர பாதுகாப்பு போலீசாரும், இந்திய கடலோர காவல்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.