செய்திகள்
கொரோனா வைரஸ்

டெல்லியில் மேலும் 10,774- பேருக்கு கொரோனா

Published On 2021-04-11 13:55 GMT   |   Update On 2021-04-11 13:55 GMT
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 5,158- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் ஏற்பட்டுள்ளது.   தொற்று பரவல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.  டெல்லியிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், டெல்லியில் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, “ டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,774 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 5,158- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று 48 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 9.43 சதவிகிதமாக உள்ளது.
Tags:    

Similar News