செய்திகள்
ஷர்மிளா ரெட்டி

ஜூலை மாதம் புதிய கட்சி தொடங்குகிறார் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி

Published On 2021-04-10 15:06 GMT   |   Update On 2021-04-10 15:06 GMT
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ரெட்டி தெலுங்கானாவில் புதிய கட்சியை தொடங்க உள்ளார்.
அமராவதி:

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜேசேகர ரெட்டியின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா ரெட்டி தெலங்கானாவில் ஜூலை 8-ஆம் தேதி புதிய கட்சியைத் தொடங்கவிருக்கிறார்.

தெலுங்கானாவில் 2023-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் ஜூலை 8-ஆம் தேதி தெலங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சியை ஷர்மிளாதொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

அன்றைய தினம், கட்சியின் பெயர், சின்னம், கொள்கை ஆகியவை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 8 ஆம் தேதி ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டியின் நினைவு நாள் என்பது நினைவுகூரத்தக்கது. 
Tags:    

Similar News