செய்திகள்
சபாநாயகர் ஓம் பிர்லா

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கொரோனாவில் இருந்து மீண்டார்

Published On 2021-04-03 17:43 GMT   |   Update On 2021-04-03 17:43 GMT
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி:

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தொற்று பாதிப்பிலிருந்து அவர் குணமடைந்தார்.
Tags:    

Similar News