செய்திகள்
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் புதிதாக 4,991 பேருக்கு கொரோனா

Published On 2021-04-03 01:59 GMT   |   Update On 2021-04-03 01:59 GMT
கர்நாடகத்தில் புதிதாக 4,991 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது
பெங்களூரு :

கர்நாடக சுகாதாரத்துறை மாநிலத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 18 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,991 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 6 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 6 பேர் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 591 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து நேற்று 1,631 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 59 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 269 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 219 ஆக அதிகரித்துள்ளது.



அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பல்லாரியில் 34 பேர், பெலகாவியில் 35 பேர், பெங்களூரு புறநகரில் 69 பேர், பீதாில் 126 பேர், சாம்ராஜ்நகரில் 13 பேர், சிக்பள்ளாப்பூரில் 10 பேர், சிக்கமகளூருவில் 47 பேர், சித்ரதுர்காவில் 22 பேர், தட்சிண கன்னடாவில் 105 பேர், தாவணகெரேயில் 21 பேர், தார்வாரில் 62 பேர், கதக்கில் 16 பேர், ஹாசனில் 102 பேர், கலபுரகியில் 105 பேர், கோலாரில் 74 பேர், மண்டியாவில் 58 பேர், மைசூருவில் 174 பேர், ராய்ச்சூரில் 27 பேர், சிவமொக்காவில் 37 பேர், துமகூருவில் 142 பேர், உடுப்பியில் 95 பேர், உத்தரகன்னடாவில் 25 பேர், விஜயாப்புராவில் 30 பேர், யாதகிரியில் 18 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் 5 பேர், கலபுரகியில் ஒருவர் என 6 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News