செய்திகள்
ப சிதம்பரம்

உள்ஒதுக்கீடு தற்காலிகமானதா? நிரந்தரமானதா?- ப.சிதம்பரம் கேள்வி

Published On 2021-03-31 09:38 GMT   |   Update On 2021-03-31 09:38 GMT
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தற்காலிகமானதா? நிரந்தரமானதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி:

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தற்காலிகமானதா? நிரந்தரமானதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதல்-அமைச்சர் கூறுகிறார். அவருக்கு தென் மாவட்டங்களின் கவலை.

இல்லையெனில், 10.5 சதவீதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு.

முதல் -அமைச்சர் என்ன சொல்லப் போகிறார்? எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பா.ஜ.க. என்ன சொல்லப் போகிறது?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News