செய்திகள்
தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது - பினராயி விஜயன்
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மத்திய தேர்தல் தலைமை ஆணையருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவிற்கு வருகை தந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள உட்கட்டமைப்பு நிறுவனமான கிபி அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அனைத்து தகவல்களையும் அமலாக்கத் துறையினர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து மாநில அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் மத்திய அமலாக்கத் துறையினர் பாரபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய அமலாக்கத் துறையினர் தேர்தல் விதிகளுக்கு எதிராக செயல்படுவதாக முதல் மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மத்திய தேர்தல் தலைமை ஆணையருக்கு புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
கேரளாவிற்கு வருகை தந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள உட்கட்டமைப்பு நிறுவனமான கிபி அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அனைத்து தகவல்களையும் அமலாக்கத் துறையினர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து மாநில அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் மத்திய அமலாக்கத் துறையினர் பாரபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.