செய்திகள்
சிபிஎஸ்இ

ரமலான் நாளில் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம்

Published On 2021-03-05 17:49 GMT   |   Update On 2021-03-05 17:49 GMT
சி.பி.எஸ்.இ. தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய கல்வித்துறை மந்திரிக்கும், சிபிஎஸ்இ இயக்குனருக்கும் மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.
புதுடெல்லி:

ரமலான் நாளில் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்தியக் கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், சி.பி.எஸ்.இ. இயக்குநர் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி, சு.வெங்கடேசன் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, ரமலான் அன்று நடக்கவிருக்கும் சி.பி.எஸ்.இ தேர்வு தேதிகளை மாற்றுவதற்கான கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரமலான் தினத்தன்று மே 13, 15-ல் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு இயற்பியல் தேர்வு  ஜூன் 8, 2021 அன்று நடத்தப்படும்.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு அறிவியல் மற்றும் கணித தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

10-ம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான புதிய தேர்வு தேதி மே 21 என்றும், 10-ம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான புதிய தேர்வு தேதி ஜூன் 2-ல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News