செய்திகள்
பல்பிர் எஸ் ரஜேவால்

பாஜக-வை தோற்கடியுங்கள் என மக்களிடம் வலியுறுத்துவோம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

Published On 2021-03-02 13:22 GMT   |   Update On 2021-03-02 16:02 GMT
தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு விவசாயிகள் சார்பில் பா.ஜனதாவை தோற்கடிக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்வோம் என விவசாய சங்கத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இருந்தாலும் மத்திய அரசு சட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டம் ஓயாது என விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிஷான் யூனியன் தலைவர் பல்பிர் எஸ் ரஜேவால் கூறுகையில் ‘‘தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளம், கேரள மாநிலங்களுக்கு நாங்கள் குழுக்களை அனுப்புவோம். நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. ஆனால், மக்களிடம் பா.ஜனதாவை தோற்கடிக்கக் கூடிய வேட்பாளர்களுக்கு வாக்கு அளியுங்கள் என வலியுறுத்துவோம். விவசாயிகளிடம் மோடி அரசு காட்டும் அணுகுமுறை குறித்து கூறுவோம்’’ என்றார்.



ஸ்வாராஜ் இந்தியாவின் யோகேந்திர யாதவ் கூறுகையில் ‘‘பா.ஜனதாவை தண்டிக்க வேண்டும் என தேர்தல்  நடைபெறும் மாநிலங்களில் மக்களிடம் எடுத்துரைப்போம். தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் செல்வோம். மார்ச் 12-ந்தேதி கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்துடன் நடைபெறும்’’ என்றார்.
Tags:    

Similar News