செய்திகள்
கங்கனா ரனாவத்

கிரிமினல் வழக்குகளை சிம்லாவிற்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார் கங்கனா ரனாவத்

Published On 2021-03-02 11:31 GMT   |   Update On 2021-03-02 11:31 GMT
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கு எதிராக பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்டிர மாநில அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறினார். மேலும், டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவு செய்தார். மும்பை போலீஸ் குறித்தும் விமர்சனம் செய்திருந்தார். இதனால் அவர் மீதும் அவரது சகோதரி ரங்கோலி மீதும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான வழக்குகள் இன்னும நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் அவர் மீதும், அவரது சகோதரி மீதும் போடப்பட்டுள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளையும் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவிற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
Tags:    

Similar News