செய்திகள்
தெலுங்கானா மஞ்சீரா நதியில் தொழிலாளியை முதலை கடித்து கொன்றது
தெலுங்கானா மஞ்சீரா நதியில் தொழிலாளியை முதலை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் சோய்பேட்டா கிராமத்தை சேர்ந்தவர் ராமுலு. இவர் அங்குள்ள மஞ்சீரா நதிக் கரையோரம் மாடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தார். நதிக்குள் இறங்கிய மாட்டை கரைக்கு கொண்டு வர முயற்சித்தார். அப்போது ராமுலுவை முதலை ஒன்று தாக்கி தண்ணீருக்குள் இழுத்து சென்றது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மஞ்சீரா நதி மற்றும் அணை பகுதிகள் சுற்றுலா தளமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.