செய்திகள்
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலத்தில்தான் குறையாமல் இருந்தது. ஆனால் கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால் பிப்ரவரி 2-வது வாரத்தில் இருந்து இந்த இரண்டு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் 77,618 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 21,61,467 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 5,754 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 20,30,458 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழக்க, இதுவரை 52,184 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் 77,618 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 21,61,467 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 5,754 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 20,30,458 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழக்க, இதுவரை 52,184 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.