செய்திகள்
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

கொரோனாவிற்குப்பின் உள்நாட்டு விமானத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3.13 லட்சம் பேர் பயணம்

Published On 2021-03-01 11:06 GMT   |   Update On 2021-03-01 11:06 GMT
கொரோனா பொதுமுடக்கத்திற்குப்பின் விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கிய பின்னர், முதன்முறையாக நேற்று, இதுவரை இல்லாத அளவிற்கு 3.13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு விமான சேவை நடைபெற்று வருகிறது.

நேற்று (பிப்ரவரி 28) உள்ளாட்டு விமான சேவைகளில் 2,353 விமானங்கள் மூலம் 3,13,668 பேர் பயணம் செய்துள்ளனர். கொரோனா பொது முடக்கத்திற்குப்பின் ஒரே நாளில் உள்நாட்டு விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்தது இதுதான் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News